ஆப்நகரம்

அதிமுக அலுவலக சாவி: உச்ச நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்!

அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்

Samayam Tamil 4 Aug 2022, 12:10 pm
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.
Samayam Tamil அதிமுக அலுவலகம்
அதிமுக அலுவலகம்


இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி: யு.யு.லலித் பெயர் பரிந்துரை!
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக, சீல் அகற்றப்பட்டு இபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருள்களைக் காணவில்லை என அதிமுக எம்.பி.யும், இபிஎஸ் ஆதரவாளருமான சிவி சண்முகம் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி