ஆப்நகரம்

பிபின் ராவத் அஞ்சா நெஞ்சர்.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்!

விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சர் என ஓபிஎஸ், ஈபிஎஸ் புகழஞ்சலி.

Samayam Tamil 8 Dec 2021, 10:32 pm
இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் அவரது மனைவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பிபின் ராவத் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil OPS - EPS


இந்நிலையில், பிபின் ராவத் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களும், அவருடைய மனைவியும், மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளும் நீலகிரி மாவட்டம், குன்னூர், வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராணுவ உயரதிகாரிகளுடன் சென்றபோது அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பைலட் ஒருவரை தவிர 13 பேர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தோம்.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றிய வீரர் பெருமக்கள்.

7 தமிழர் விடுதலை: ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும்.. ராமதாஸ்
அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விபத்தில் உயிரிழந்திருக்கும் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி