ஆப்நகரம்

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன....!

அதிமுகவில் பிரிந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அணிகள் இரண்டும் ஒன்று சேர்ந்தன.

TNN 21 Aug 2017, 3:47 pm
சென்னை: அதிமுகவில் பிரிந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அணிகள் இரண்டும் ஒன்று சேர்ந்தன.
Samayam Tamil ops eps merged successfully today
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன....!


அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியது.

இதற்கிடையில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அணிகள் இணைவதில் சிக்க ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று பேசினர்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று, ஒருவரை ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

OPS EPS merged successfully today.

அடுத்த செய்தி