ஆப்நகரம்

ஓபிசி இட ஒதுக்கீடு: மோடிக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்!

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 31 Jul 2021, 12:11 pm
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்தது.
Samayam Tamil pm modi


இதனைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஜூலை 30) இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ஓபிஎஸ் இன்று (ஜூலை 31) எழுதிய கடிதத்தில், "தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு, நான் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அதனை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த முடிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது.
ஆகஸ்ட் 20 பள்ளிகள் திறப்பு? முதல்வர் வெளியிடும் அறிவிப்பு?
ஆயிரக்கணக்கான ஓபிசி மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்த முடிவு புரட்சிகரமான முடிவாகும். மேலும், இந்தியாவில் சமூக நீதியின் புதிய வடிவத்தை இது உருவாக்கும். இது பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி