ஆப்நகரம்

சொந்த ஊர் மக்களுக்கு ஒரு கிணற்றை கூட விட்டுக் கொடுக்காதவர் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ...!

ஓபிஎஸ் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

TNN 20 Aug 2017, 12:24 pm
சென்னை: ஓபிஎஸ் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ops is not valid person says vetrivel mla
சொந்த ஊர் மக்களுக்கு ஒரு கிணற்றை கூட விட்டுக் கொடுக்காதவர் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ...!


அதிமுக அணிகள் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். போயல் தோட்டம் தான் சசிகலாவின் முகவரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா சிறையில் இருக்கும் போது, அவர் சம்மதம் இல்லாமல் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற முடியாது. ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு முன், வாரிசுதாரர்களிடம் அனுமதி பெற வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ் என்றும், சொந்த ஊர் மக்களுக்கு ஒரு கிணற்றை கூட விட்டுக் கொடுக்காதவர் என்றும் குற்றம்சாட்டினார்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கும் ஓபிஎஸ் தான் காரணம் என்றும், ஓபிஎஸ் அணியில் உள்ளவர்களே இணைப்பை எதிர்ப்பதாகவும் கூறினார்.

OPS is not valid person says Vetrivel MLA.

அடுத்த செய்தி