ஆப்நகரம்

ஓபிஎஸ்ஸின் அடுத்த கேம் பிளான்... அதிரடியா, அமைதியா?

'தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும்' என்ற ஓபிஎஸ்ஸின் ஒற்றை ட்வீட், முதல்வர் வேட்பாளருக்கான கேமில் அவர் இனி அதிரடி காட்டுவாரா, அமைதியாக அடங்கிப் போவாரா என்ற எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Samayam Tamil 5 Oct 2020, 9:07 pm
'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்' என்று கடந்த வாரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓங்கி ஒலித்த அதிமுக தொண்டர்களின் குரல், 'தமிழகத்தின் அடுத்த முதல்வரே' என்று இன்று தேனியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil ops eps


தமது தொண்டர்களின் இந்த விருப்பத்துக்கு இணங்க, 'இந்த முறை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக நான் ஏன் இருக்கக்கூடாது?' என்று கட்சியின் செயற்குழுவில் இபிஎஸ்ஸை நேருக்கு நேர் பார்த்தே கேட்டும்விட்டார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸின் இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு நாளை மறுநாள் விடை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலா கைகாட்டுபவரோ, பாஜக விரும்புபவரோ அதிமுகவில் முதல்வராக இருக்க முடியும் எனும்போது, ஜெயலலிதாவுக்கு மாற்றாக மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக விரும்புவதில் வியப்போன்றும் இல்லை. அவரது இந்த ஆசையில் தவறும் இல்லை.

தலைநகர் நோக்கி ஓபிஎஸ், தேனி ஆரவாரம் சென்னையில் எடுபடுமா?

ஆனால், 'எனது தலைமையிலான ஆட்சியை மோடிஜியே பாராட்டிக்கிட்டீருக்காரு! அப்படியிருக்கும்போது எப்படி நீங்க முதல்வர் வேட்பாளராக முடியும்னு?' எடப்பாடியார் கட்டன் ரேட்டாக இருப்பதுதான் தற்போது விஷயமே.

எக்காரணம் கொண்டும் முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க தான் தயாராக இல்லை என்பதுதான் ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் சொல்லும் ஸ்ட்ராங் மெசேஜாக உள்ளது. பாஜக டெல்லி தலைமையின் ஆசி மற்றும் சசிகலா அண்ட் கோவுடனான மறைமுக ராசியின் காரணமாக, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் இவ்வளவு இபிஎஸ் உறுதியாக இருக்கிறாரா எனத் தெரியாது.

ஆனால், அதிமுக நிர்வாகம் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி, பொன்னான புதன்கிழமையன்று அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டால், அதன்பிறகு அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் ஆட்டம் அதிரடியாக இருக்குமா, இல்லை அமைதி வழியில் பயணிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

அதிமுகவின் மாஸ்டர்: அரசியல் வியூகத்தில் எடப்பாடியை விஞ்சும் ஓபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அறிவிக்கப்படாதபட்சத்தி்ல், அதன் விளைவாக அவருக்கு அதிருப்தி ஏற்படும் நிலையில், கட்சியில் உள்ள தமது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரனுடன் கைகோர்த்து, தேர்தலுக்கு கட்சியை முழுமையாக த/மது கட்டுப்பாட்டில் கொண்டு வருவாரா?

இபிஎஸ். ஓபிஎஸ், சசிகலா என்று மூன்று தரப்பினரையும் சமாதானமாக போக சொல்லும் பாஜகவின் டெல்லி தலைமையை அவர் காம்ப்ரமைஸ் செய்வாரா என்பதில்தான் ஓபிஎஸ்ஸின் அதிரடி ஆட்டம் அடங்கியுள்ளது.

இல்லை ஏற்கெனவே ஜெயலலிதாவின் சமாதிக்கு முன் தியானம் இருந்தும் அதற்கான பலன் கிட்டாமல் போய்விட்டது. தர்மயுத்தத்திலும் வெற்றிப் பெற முடியாமல் சமாதான கொடியை அசைக்க வேண்டியதாகிவிட்டது.


எனவே, தமது தலைமையில் ஆட்சி என்று பகல் கனவு கண்டுகொண்டு, கட்சியில் தற்போது தமக்கிருக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவி, விரைவில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் வழிகாட்டுதல் குழுவில் தமது ஆதரவாளர்களுக்கு கிடைக்கவுள்ள பிரதிநிதித்துவம், சட்டப்பேரவைத் தேர்தலில் தமது ஆதரவாளர்களுக்கு கிடைக்கப்போகும் கணிசமான எம்எல்ஏ சீட்கள் ஆகியவற்றை ஓபிஎஸ் இழக்காமல் இருக்கப் போகிறாரா?

அதிமுக எம்.பி.யான தமது மகனுக்கு மத்தியில் அமைச்சர் பதவி அல்லது தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி என்று கட்சி, அரசு அதிகாரத்தில் அளிக்கப்படுவதாக கூறப்படும் இந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வோம் என்று முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் ஓபிஎஸ் அமைதி ஆகிவிடுவாரா என்ற கேள்விக்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

அடுத்த செய்தி