ஆப்நகரம்

”தேர்தல் ஆணையத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது”- ஓ.பன்னீர் செல்வம் கருத்து..!

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 23 Mar 2017, 3:21 am
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ops opinion about two leaves symbol
”தேர்தல் ஆணையத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது”- ஓ.பன்னீர் செல்வம் கருத்து..!


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
”அதிமுக கழகத்திற்கு புரட்சித் தலைவர் உருவாக்கிய, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கட்சியையும், ஆட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தமிழ் மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPS opinion about Two leaves symbol

அடுத்த செய்தி