ஆப்நகரம்

டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ்: மோடியுடன் மோதலா?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்காக டெல்லி சென்ற தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்திக்காமல் திரும்பியுள்ளார்.

Samayam Tamil 20 Jan 2018, 4:48 pm
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்காக டெல்லி சென்ற தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்திக்காமல் திரும்பியுள்ளார்.
Samayam Tamil ops return to tn without meeting pm sparks speculations of aiadmk bjp rift
டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ்: மோடியுடன் மோதலா?


டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

வழக்கமாக ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒவ்வொரு முறை டெல்லி சென்ற சமயத்திலும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வந்த ஓபிஎஸ் இந்த முறை பிரதமரைச் சந்திக்காமலேயே நேற்று தமிழகம் திரும்பினார்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது, “பிரதமர் மோடியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எதிர்காலத்திலும் ஏற்படாது.” என்று பதிலளித்தார்.

அடுத்த செய்தி