ஆப்நகரம்

ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ஓ.பி.எஸ்..!

தமிழக ஆளுநருக்கு தனது ராஜினாமா கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அனுப்பியுள்ளார்.

TNN 5 Feb 2017, 8:18 pm
தமிழக ஆளுநருக்கு தனது ராஜினாமா கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அனுப்பியுள்ளார்.
Samayam Tamil ops sent his resignation letter to tamilnadu governor
ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ஓ.பி.எஸ்..!


இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் நடைபெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் போதே,தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் ஓ.பி.எஸ் ஒப்படைத்துவிட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் இன்று மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு,ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமா கடிதம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில்,”என்னுடைய சொந்த காரணங்களுக்காக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.கடந்த 06-12-2016-ஆம் தேதி அன்று நீங்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்த அமைச்சரவையையும் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ராஜினாமா கடிதத்தில் நேரம் மதியம் 1.41 மணி என ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.எனவே அவர் இன்று மதியமே தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

OPS sent his resignation letter to Tamilnadu governor

அடுத்த செய்தி