ஆப்நகரம்

ஜெயலலிதா இல்லம்: ஓபிஎஸ் பேச்சை கேட்காத இபிஎஸ் - பகீர் தகவல்!

ஜெயலலிதா இல்லத்தை கட்சிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தீபா, தீபக் ஆகிய இருவரும் தெரிவித்ததாக குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 30 Jun 2022, 6:59 pm
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என உத்தரவிட்ட நீதிமன்றம், வாரிசு தாரர்களான தீபா, தீபக் ஆகியோரிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
Samayam Tamil ஓபிஸ், இபிஎஸ்
ஓபிஸ், இபிஎஸ்


இதனிடையே, மேல்முறையீடு வழக்குகளில் பெரும்பாலும் கீழமை நீதிமன்ற உத்தரவுகளே ரிப்பீட் ஆகும் என்று அதிமுக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதேசமயம், ஜெயலலிதா தரப்பு கட்ட வேண்டிய வருமான வரி தொகையை தீபா, தீபக் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், ஏற்கனவே பண நெருக்கடியில் சிக்கியிருக்கும் அவர்களிடம் பணம் கொடுத்து ஜெயலலிதாவின் போயஸ் பங்களாவை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தலைமை ஒரு ரகசிய டீம் அமைத்துள்ளதாகவும் “அலையா அலையும் ஈபிஎஸ், சசி: ஓ சொல்லுவாங்களா... ஓ ஓ சொல்லுவாங்களா தீபா, தீபக்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், ஜெயலலிதா இல்லத்தை கட்சிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தீபா, தீபக் ஆகிய இருவரும் தெரிவித்ததாக குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
mk stalin எனக்கு எதுக்கு விளம்பரம்? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
அப்போது பேசிய குன்னம் ராமச்சந்திரன், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தை கட்சிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தீபா, தீபக் ஆகிய இருவரும் ஓபிஎஸ்ஸிடம் கூறினர். இது தொடர்பாக ஈபிஎஸ்ஸிடம் கூறிய பிறகும், அவர் அதற்கு செவிமடுக்கவில்லை. ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பார்வைக்கு வைக்க ஒருங்கிணைப்பாளருக்கு, ஏன் இணை ஒருங்கிணைப்பாளர் ஒத்துழைப்புத் தரவில்லை?” என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா இல்லத்தை பெறுவதில் நிதிச்சிக்கல் இருந்தால், என் சொந்த பணம் ரூ.10 லட்சத்தை கட்சிக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு இல்லை எனக் கூறி ஈபிஎஸ் தரப்பினர் எங்களது கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டனர். தொண்டர்களை ஏமாற்றவே இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திமுகவிற்கு துணை போகும் வகையில் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடவில்லை.

தலைமைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கையெழுத்து வழங்கிவிட்டார். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் இன்னும் கையெழுத்திடவில்லை. எனவே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதிமுக சின்னத்தை எதிர்நோக்கி இருந்த தொண்டர்கள் சுயேச்சையாக போட்டியிடும் நிலையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தர்மயுத்தத்தின்போது பொதுச்செயலாளர் இல்லாதபோது, அவைத்தலைவர் மற்றும் பொருளாளருக்கே கட்சியும் சின்னமும் செல்லும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அப்படி என்றால் பொருளாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் கட்சி சொந்தம். அவரே ஒற்றைத் தலைமை. அதிமுகவின் நலன் கருதி எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேச ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயாராக இருக்கிறார்.” இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி