ஆப்நகரம்

எங்களுக்கு மதிப்பில்லை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்

திருவள்ளூர் அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஓபிஸ் ஆதரவாளர்களுக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Feb 2018, 8:45 am
திருவள்ளூர் அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஓபிஸ் ஆதரவாளர்களுக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil ops supporters says they dont have respect clash with eps supporters in tiruvallur
எங்களுக்கு மதிப்பில்லை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்: சமாதானம் செய்துவைத்த அமைச்சர்


திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டமானது அமைச்சர்கள் மாஃப பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் , ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

மேலும் அரசு ஒப்பந்தங்கள் தங்கள் தரப்பினருக்கு வழங்கப்படுவதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈபிஎஸ் ஆதரவாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் , ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அனைவரையும் சமாதானம் செய்து வைத்தார்.

அடுத்த செய்தி