டெல்லி: பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. பின்னர் சசிகலா, எடப்பாடி, தினகரன், ஓபிஎஸ் தொடர் பிளவுகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான இணைவுப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அதற்கான குழுக்கள் கலைக்கப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஓபிஎஸ், ஈபிஸ் அணிகள் ஓடிச் சென்று ஆதரவளித்தன. தமிழகத்தில் நீட் தேர்வு, கதிராமங்கலம், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர். இதற்கிடையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர். மேலும் அதிமுகவின் இருதரப்புக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Former chief minister O Panneerselvam meets Prime Minister Narendra Modi.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. பின்னர் சசிகலா, எடப்பாடி, தினகரன், ஓபிஎஸ் தொடர் பிளவுகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான இணைவுப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அதற்கான குழுக்கள் கலைக்கப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஓபிஎஸ், ஈபிஸ் அணிகள் ஓடிச் சென்று ஆதரவளித்தன. தமிழகத்தில் நீட் தேர்வு, கதிராமங்கலம், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர். இதற்கிடையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர். மேலும் அதிமுகவின் இருதரப்புக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Former chief minister O Panneerselvam meets Prime Minister Narendra Modi.