ஆப்நகரம்

சபாநாயகர் தனபாலுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு!

சபாநாயகர் தனபாலுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு!

TOI Contributor 17 Feb 2017, 12:51 pm
ஓபிஎஸ் அணியை சேர்ந்த செம்மலை, பொன்னையன் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர்.
Samayam Tamil ops team members met with assembly speaker dhanapal
சபாநாயகர் தனபாலுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு!


பரபரப்பான அரசியல் சூழலில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த செம்மலை, மூத்த நிர்வாகி பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகருடனான இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி