ஆப்நகரம்

#ஆர்கேநகர் தொகுதியில் நாளை முதல் #ஓபிஎஸ் பிரசாரம்!

சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில், நாளை முதலாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார்.

TNN 25 Mar 2017, 9:00 pm
சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில், நாளை முதலாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார்.
Samayam Tamil ops to start his campaign from tomorrow in rk nagar bypoll
#ஆர்கேநகர் தொகுதியில் நாளை முதல் #ஓபிஎஸ் பிரசாரம்!


ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, புதியதாக அதிமுக பொதுச் செயலாளர் பதவியேற்ற சசிகலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறார். அவருடன் ஏராளமான அதிமுக.,வினர் பிரிந்துசென்றுவிட்டனர்.

ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு நான்தான் என்றும், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்றும் கூறிவரும் பன்னீர்செல்வம் கோஷ்டி, ஆர்கே நகர் இடைத்தேர்தலில், தங்கள தரப்பில் இருந்து மதுசூதனனை வேட்பாளராக அறிவித்துள்ளது.

மேலும், சசிகலா கோஷ்டியை சேர்ந்த டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வரும் பன்னீர்செல்வம் தரப்பினர், அதிமுக என்ற பெயரையும், அதன் சின்னமான இரட்டை இலையையும் கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அவற்றை முடக்கிவிட்டது.

தற்போது அதிமுக என்ற பெயரை பயன்படுத்த முடியாமல், அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் ஓபிஎஸ் தரப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலை சந்திக்கிறது. சசிகலா தரப்பில், அதிமுக அம்மா என்ற பெயரில், டிடிவி தினகரன், தொப்பி சின்னத்திற்காக, ஏற்கனவே வாக்கு சேகரிப்பை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், பன்னீர்செல்வம், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரட்டை மின்கம்பம் என்ற சின்னத்திற்காக, நாளை (மார்ச் 26) தொடங்கி, பிரசாரம் செய்ய உள்ளார்.

முதலில், ஆர்கே நகர் தொகுதிக்கு உள்பட்ட நாகூரான் தோட்டப்பகுதியில் இருந்து ஓபிஎஸ் பிரசாரத்தை தொடங்குகிறார். இதன்போது, அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் தேர்தல் அலுவலகமும் தொடங்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

#RKNagarBypoll: OPS to start his campaign work from Tomorrow.

அடுத்த செய்தி