ஆப்நகரம்

பழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் வழிபாடு!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

TNN 28 May 2017, 11:32 pm
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Samayam Tamil ops visits palani murugan temple
பழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் வழிபாடு!


அதிமுக.,வில் இருந்து தனி அணியாகப் பிரிந்து சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசியலில் முக்கிய நபராக மாறியுள்ளார். அவரது தினசரி அரசியல் நடவடிக்கைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கோவையில் உள்ள ஆரிய வைத்திய சாலையில், புத்துணர்வு சிகிச்சைக்காக, ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டார். தொடர் அரசியல் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள உடல் களைப்பை நீக்க, அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இந்த புத்துணர்வு சிகிச்சை முடிந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ், இன்று பழனி முருகன் கோவிலுக்கு நேரில் வந்து, சுவாமி தரிசனம் செய்தார்.



பெரும் கூட்டத்திற்கு இடையே, அவர் வந்து சென்றார். முன்னதாக, ஓபிஎஸ்க்கு, பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக, சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இதையொட்டி, அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tamilnadu Former Chief Minister O.Panneerselvam visits Palani Murugan Temple and offers special prayer.

அடுத்த செய்தி