ஆப்நகரம்

2 மணி நேரம் ஓ.பி.எஸ். - ஐ உள்ளேயே காக்க வைத்த விமானம்

​​விமான பொறியாளா்கள் விமானத்தை பழுது பாா்த்தனா். இந்த இடைவேளையால் இரவு 8.30 மணிக்கு விமானம் சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் விமானம் புறப்பட்டது.

Samayam Tamil 14 Jan 2020, 8:24 am
துணை முதல்வர் ஓ.பி.எஸ் பயணம் செய்ய இருந்த விமானத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் சுமார் இரண்டு மணி நேர காத்திருப்ப்புக்குப் பின்னர் விமானம் கிளம்பியது.
Samayam Tamil O.Panneer Selvam


தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீர் செல்வம் உட்பட மொத்தம் 149 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் தனியாா் பயணிகள் விமானத்தில் எதிர்பாராத விதமாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதை வரை சென்ற விமானம், இந்த இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சிறிது நேம் அங்கு பதற்றம் நிலவியது.

மக்களை தவறான பாதையில் வழிநடத்தும் மோடி, அமித்ஷா: சோனியா சாடல்

பின்பு இழுவை வாகனம் மூலம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இந்தக் கோளாறால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 150க்கும் மேற்பட்டோர், சுமார் 2 மணி நேரமாக விமானத்திலேயே அமா்ந்திருந்தனா்.

விமான பொறியாளா்கள் விமானத்தை பழுது பாா்த்தனா். இந்த இடைவேளையால் இரவு 8.30 மணிக்கு விமானம் சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் விமானம் புறப்பட்டது.

அடுத்த செய்தி