ஆப்நகரம்

ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு கட்டணம்: நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக் கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 30 Nov 2020, 12:13 pm
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டன. மேலும் இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்


இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிப்பது விதிகளுக்கு முரணானது என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விடைத் தாள் திருத்துவது மட்டுமல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த கட்டணத் தொகை செலவழிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை திருப்பி வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

அடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மீதமுள்ள தொகை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இன்னும் இரண்டு நாள்தான்: தென் தமிழகத்தை நோக்கி வரும் புயல்!

இந்த தீர்ப்பை இன்று வழங்கினார். அதில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக் கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என கூறினார். மேலும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மீதமுள்ள தொகையை நான்கு வாரத்திற்குள் பல்கலைக் கழகத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி