ஆப்நகரம்

இன்று முதல் டாஸ்மார்க் மதுபானக் கூடங்கள் மூடல்...! வெளியானது அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபானக் கூடங்கள் மற்றும் பார்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Samayam Tamil 26 Apr 2021, 6:04 pm
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil tasmac bars tamil nadu


ஏற்கனவே தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. கடைகள், கோவில்கள், வியாபார தளங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கார், வேன், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.

மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இன்று டாஸ்மாக் கடைகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மற்றும் பார்களுக்கு அரசின் மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: தமிழகம் போர்க்களமாக மாறும் - சீமான் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 147 அரசு மதுபான பார்களும் 70 தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இவைகள் அனைத்தையும் மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் பொது மக்களின் நலன் கருதியும் இத்தகைய அறிவிப்பு வெளியிட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி