ஆப்நகரம்

பண்ருட்டி வியாபாரி மரணம்: மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக்கு உத்தரவு

காவல்துறையின் தாக்குதலில் உயிரிழந்த பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரியின் மரணம் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Nov 2020, 3:28 pm
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வம். இவரை அக்டோபர் 28ஆம் தேதி அன்று திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்ற காவல்துறையினர் நெய்வேலி நகர காவல்நிலையத்திலும் தனியார் விடுதியிலும் இரண்டு நாட்கள் தங்க வைத்து மிகவும் கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
Samayam Tamil பண்ருட்டி கஸ்டடி மரணம்


அந்த கடிதத்தில், ''கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாரிடம் எனது கணவரை காணவில்லை என்று அதனால் புகார் கொடுக்க வந்தேன் என்று கூறினேன். அவர்கள் தன் கணவர் மீது பல வழக்குகள் இருப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை எனது கணவரின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு என்னை இந்திரா நகரில் உள்ள ராணி & ராணி என்ற லார்ஜிக்கு வருமாறு கூறினார்கள்.

நானும் எனது குழந்தையும் அங்கு சென்ற பின்னர் அங்கிருந்த போலீசார் என்னிடம் 10 பவுன் செயின் கேட்டு மிரட்டினார்கள். என் கணவன் எந்த தவறும் செய்யாதவர். நான் ஏன் நகை பணம் தரவேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று மிரட்டினார்கள்.

நான் என்னிடம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.30 ஆம் தேதி அன்று காலை நெய்வேலி நகர போலீசார் என்னை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார்கள் நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்ற போது எனது கணவரை காவல் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தார்கள். எனது கணவர் என்னையும் எனது குழந்தையையும் பார்த்ததும் கதறி அழுதார். உடனே போலீசார் எனது கணவரிடம் பேச அனுமதித்தார்.

எழுவர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு; என்ன செய்யப் போகிறது திமுக?

அப்போது எனது கணவர் ''தன்னை சந்தேகப்பட்டு அழைத்து வந்ததாகவும் திருட்டு வழக்குகளை
ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக கூறினார். இந்நிலையில் எனது கணவர் படு காயங்களுடன் உயிரிழந்தார். அவரது மரணத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து செல்வத்தின் மரணம் தொடர்பாக விசாரிக்க கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு கடிதம் எழுதினார். கடிதத்தின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி