ஆப்நகரம்

காவல்துறையில் ஆண்டுதோறும் வீணாகும் ரூ.100 கோடி!

காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் 'ஆர்டர்லி'யாக இருக்கும் சுமார் 5 ஆயிரம் போலீசாரால் ஆண்டு தோறும் 100 கோடி ரூபாய் அரசுப் பணம் வீணாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Mar 2018, 1:25 am
காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் 'ஆர்டர்லி'யாக இருக்கும் சுமார் 5 ஆயிரம் போலீசாரால் ஆண்டு தோறும் 100 கோடி ரூபாய் அரசுப் பணம் வீணாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Tamil_News_large_1749625


தமிழகக் காவல்துறைப் பதவிகள் 13 நிலைகளில் உள்ளன. கான்ஸ்டபிள், கிரேட் ஒன் கான்ஸ்டபிள், ஹெட்-கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.ஐ, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, கூடுதல் எஸ்.பி, எஸ்.பி., டி.ஐ.ஜி, ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி, டி.ஜி.பி. ஆகியவை இதில் அடங்கும்.

இதில் ஒன்றே கால் லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 5 ஆயிரம் போலீசார் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக கைக்கூலி வேலை செய்து வருகின்றனர் என்று புகார் எழுந்துள்ளது. இப்படி வீட்டு வேலைகள் செய்யும் போலீசாருக்கு மாதச் சம்பளமாக தலா 20 ஆயிரம் ரூபாய் அரசு அளித்து வருகிறது என்றும் இதனால் ஆண்டு தோறும் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சில போலீசார், இந்தியாவில் கேரளா, டெல்லி, பீகார், ஓடிசா இருப்பதைப் போல காவல் துறையினருக்கான சங்கம் தமிழகத்தில் உருவானால் இந்த ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கின்றனர்.

அடுத்த செய்தி