ஆப்நகரம்

Organ Donation: நான்காவது முறையாக உறுப்பு தானத்தில் முன்னோடியாக திகழும் தமிழகத்திற்கு விருது

உடல் உறுப்பு தானத்தில் முன்னோடியாக தமிழகம் திகழ்வதாக நான்காவது முறையாக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2018, 12:30 pm
சென்னை : உடல் உறுப்பு தானத்தில் முன்னோடியாக தமிழகம் திகழ்வதாக நான்காவது முறையாக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
Samayam Tamil organ donation


உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு இந்த விருதை தொடர்ந்து 4வது முறையாக பெறுவது குறிப்பிடத்தக்கது.

விருது பெறுவது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், தமிழகத்தில் சட்ட விரோதமாக உறுப்பு மாற்று சிகிச்சை, உடல் உறுப்பு திருட்டு நடப்பது அதிகரித்து வருகின்றது.

உடல் உறுப்பு தானம் பெற்று அறுவை சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனை நிர்வாகம் முறைகேடு

அண்மையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் விழுப்புரம், கல்லக்குறிச்சி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்.

அவரின் உடல் உறுப்பு திருடப்பட்டதாகவும், அது குறித்து விசாரிக்க தமிழகத்திற்கு வலியுறுத்த, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் உடல் உறுப்பு திருடப்பட்டது உண்மை என தெரியவந்தது.

அடுத்த செய்தி