ஆப்நகரம்

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி - சலுகைகளை வாரி வழங்கிய தமிழக முதல்வர்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, பெண் குழந்தைகளுக்கு உதவி தொகை உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Samayam Tamil 19 Feb 2020, 1:06 pm
2020-21ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி துணை முதலமைச்ச்சரும், நிதியமைசருமான ஓ.பன்னீர்செல்வத்தால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டு 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Palaniswami


இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, பெற்றோர் இல்லாமல் வளரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு உதவி தொகுப்பாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும்.

சிஏஏ எதிர்ப்பு: சட்டமன்றத்தை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்கள்!

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு வயது மற்றும் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு 15 கோடி ரூபாயில் சென்னையில் தங்கும் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1,500ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்...
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது. இது மாதம் ரூ.4,000ஆக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

குழந்தைகளின் பாலின விகிதங்களை உயர்த்துவதற்காக சிறப்பு செயல்படும் மூன்று மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றுகளும் வழங்கப்படும்.

“மீடியா அப்படி தொழில் பண்ணக்கூடாது ஒகேவா?, கருணாநிதி போட்ட பிச்சைங்க...” பிரபல திமுக எழுத்தாளர்!

வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.

அடுத்த செய்தி