ஆப்நகரம்

தமிழ்நாட்டுல வேறு மொழி பெயருக்கு இடமே இல்ல, அதிர விட்ட அமைச்சர்!

தமிழ்நாட்டில் உள்ள வேற்று மொழி தெரு பெயர்கள், ஊர் பெயர்களை தமிழில்...

Samayam Tamil 16 Nov 2019, 3:51 pm
சென்னை திருவான்மியூரில் கனரா வங்கி சார்பாக நடந்த கருத்தரங்கு ஒன்றில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று காலை பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சிக்குப்பின் அமைச்சர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
Samayam Tamil K._Pandiarajan


ஐஐடி காவி மயமாகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதுபோல் பார்க்கக் கூடாது. அரண்டவன் கண்ணில் தெரிவதெல்லாம் பேய் என்பதைப் போல் அவர், எதைத் தொட்டாலும் ஸ்டாலினுக்கு அது காவி நிறமாகத் தெரிகிறது. தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு நிறமும் கிடையாது.

மாணவர்களின் தேர்வில் விளையாடிய கல்வித்துறை அதிகாரிகள்!

இந்திய பண்பாடு வானவில்லின் பல நிறங்களை ஒன்றிணைத்து விளங்குவதாகத் திகழ்கிறது. இதில் தமிழ்நாடும் அடங்கும். தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்வி நிறுவனங்களிலும் காவி மயம் என்பதே கிடையாது.

எனக்கும் உதயநிதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீரெட்டி..

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டிக்குமுன் நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெருக்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் விரைவில் தமிழ்மொழியில் மாற்றப்படும். முதற்கட்டமாகத் தெருக்கள், ஊர்கள் என ஆயிரம் இடங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்படும்” என்றார்.

அடுத்த செய்தி