ஆப்நகரம்

“மொழி தெரியவில்லை என்றாலும், விவசாயி வலி தெரிகிறது” : போராட்டத்தில் பங்கெடுத்த வெளிமாநில விவசாயிகள்!

“மொழி தெரியவில்லை என்றாலும், விவசாயி வலி தெரிகிறது” : போராட்டத்தில் பங்கெடுத்த வெளிமாநில விவசாயிகள்!

TOI Contributor 27 Mar 2017, 12:04 pm
டெல்லி : கடந்த 14 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் மற்ற மாநில விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil other state farmers also supporting and participated in delhi tamil farmers protest
“மொழி தெரியவில்லை என்றாலும், விவசாயி வலி தெரிகிறது” : போராட்டத்தில் பங்கெடுத்த வெளிமாநில விவசாயிகள்!


வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழக விவசாயிகள் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றால் தான், தமிழகம் திரும்புவோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் பிற மாநில விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். உத்தரபிரதேசம், ஹரியான, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மொழி தெரியவில்லை என்றாலும், விவசாயிகளின் கஷ்டம் தெரிகிறது என்றும் தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி