ஆப்நகரம்

வெளிமாநில கல்வியாளா்களைக் கொண்டு தமிழக மாணவா்களுக்கு பயிற்சி – அமைச்சா்

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டில் வெளிமாநில கல்வியாளா்களைக் கொண்டு மாணவா்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 8 Sep 2017, 10:05 pm
தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டில் வெளிமாநில கல்வியாளா்களைக் கொண்டு மாணவா்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil other state teachers will teach tamilnadu school students
வெளிமாநில கல்வியாளா்களைக் கொண்டு தமிழக மாணவா்களுக்கு பயிற்சி – அமைச்சா்


தமிழகம் முழுவதும் நீட்டுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும் போராட்டத்தின் போது தமிழக அமைச்சா்கள், மத்திய அரசுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏனெனில் நீட்தோ்வு கொண்டுவரப்பட்டதற்கு தமிழக அமைச்சா்களும் அரசும் தான் என்று விமா்சிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பாட திட்டங்கள் மற்றும் கல்வி கொள்கை கடந்த 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தொிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று ஆட்சியாளா்கள் தொிவித்திருந்தனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 412 மையங்களில் வெளிமாநில கல்வியாளர்களைக் கொண்டு தேசிய அளவிலான பாடத்திட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி