ஆப்நகரம்

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெள்வதே இலக்கு – சதீஷ் சிவலிங்கம்

காமன் வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 19 Apr 2018, 12:11 pm
காமன் வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil 23


அண்மையில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சாா்பில் பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சோ்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றாா். இதனைத் தொடா்ந்து அவா் இன்று பதக்கத்துடன் சென்னை விமான நிலையம் வந்தாா்.

சென்னை வந்த சதீஷ் சிவலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு என்று தொிவித்துள்ளாா்.

மேலும், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் எனது கடுமையான பயிற்சி மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை பாா்க்கிறேன். பரிசுத் தொகை அறிவித்த முதல்வா் பழனிசாமி மற்றும் என்னை தொடா்ந்து உற்சாகப்படுத்திய ரயில்வேத் துறைக்கு நன்றி தொிவித்துக் கொள்வதாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி