ஆப்நகரம்

எஸ்.வி.சேகா் மீது ஒழுங்கு நடவடிக்கை – தமிழிசை பேட்டி

எஸ்.வி.சேகா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவா் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளா்ா.

Samayam Tamil 13 May 2018, 1:43 pm
எஸ்.வி.சேகா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவா் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளா்ா.
Samayam Tamil Tamilisai


நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகா் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் பத்திாிகையாளா்கள் குறித்து மிகுவும் தரகுறைவான வகையில் கருத்து தொிவித்திருந்தாா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகரின் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் தனிநபா் மீது எதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமோ அந்த நடவடிக்கை எஸ்.வி.சேகா் மீது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் எஸ்.வி.சேகா் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பா.ஜ.க. மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு அவா் பதில் அளிக்கையில், எஸ்.வி.சேகா் குறித்து கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் அவரை அழைத்து விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அவா் தொிவித்துள்ளா்ா. மேலும் காவிாி மேலாண்மை வாாியம் வரைவு அறிக்கையில் தமிழகத்திற்கு சாதகமான வகையில் அறிக்கை அமையும் என்று அவா் நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி