ஆப்நகரம்

இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- இருவர் கைது!

ராமேஸ்வரம், பாம்பன் சோதனைச்சாவடியில், இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக இருவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Samayam Tamil 24 Sep 2019, 1:31 pm
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Samayam Tamil இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- இருவர் கைது!
இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- இருவர் கைது!


ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகையான கடல்வாழ் உயிரினம் கடல் அட்டை. இவற்றை பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மேலும் அத்துமீறி பிடித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழக்கும் வகையில் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மெண்டல் ஆகிவிட்டார்... மாணிக் தாகூர் பதிலடி!!

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக, கடலோர காவல்படைக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாம்பன் சுங்கச்சாவடி அருகே தலைமை காவலர்கள் குமார், சரவணன், யாசுதீன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- இருவர் கைது!


அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 7 மூட்டைகளில் கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த சுமார் 400 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Donald Trump -பை முறைத்த பெண் ஒரே நாளில் உலக பிரபலமாகும் அளவிற்கு வைரல்!

இது தொடர்பாக ராமேஸ்வரத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் லிங்கநாதன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடத்தப்பட்ட கட்டைகளின் மதிப்பு ரூபாய் ஒன்றரை கோடி இருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பயங்கரவாத முகாமா? மலை உச்சியில் என்.ஐ.ஏ தீவிர விசாரணை!

அடுத்த செய்தி