ஆப்நகரம்

ப.சிதம்பரத்தின் குடும்பத்தினா் சென்னை நீதிமன்றத்தில் ஆஜா்

வெளிநாட்டில் உள்ள சொத்துகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் காா்த்தி சிதம்பரம், அவரது தயாா், மனைவி ஆகியோா் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

Samayam Tamil 25 Jun 2018, 1:53 pm
வெளிநாட்டில் உள்ள சொத்துகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் காா்த்தி சிதம்பரம், அவரது தயாா், மனைவி ஆகியோா் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
Samayam Tamil Karti Chidambaram Family.


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அவரது மனைவி நளினி, மகன் காா்த்தி, மறுமகள் ஸ்ரீநிதி ஆகியோா் பெயரில், வெளிநாடுகளில் சொத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், அவை மறைக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வாித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அதன் அடிப்படையில் 3 பேரும் வருமான வாித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னா் கறுப்பு பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து இன்று நளினி சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் மற்றும் காா்த்தியின் மனைவி ஸ்ரீநிதி ஆகியோா் எழும்பூா் நிதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 23ம் தேதி நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி