ஆப்நகரம்

சிதம்பரம் சீக்கிரம் கம்பி எண்ணுவார்: சு.சுவாமி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2018, 6:06 pm
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil p chidambaram will be arrested soon predicts subramanian swamy
சிதம்பரம் சீக்கிரம் கம்பி எண்ணுவார்: சு.சுவாமி


ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ பல நாட்கள் நடத்திய விசாரணைக்குப் பின் இன்று அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வரும் 24ம் தேதி வரை அவரை டெல்லி திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், அவரது ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்கவும் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, “ப.சிதம்பரம் விரைவில் கைது செய்யப்படுவார். பிரதமர் தலையீட்டால் இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சுதந்திரமாக விசாரணையை நடத்துகின்றன.” என்றார்.

மேலும், “சிதம்பரம் தெரிந்தே தவறு செய்துள்ளார். அவரால் கார்த்தி சிதம்பரத்திற்கு லாபம் கிடைத்தது. சிதம்பரத்தின் மீதும் ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ப.சிதம்பரம் சிறைக்கு செல்வது நிச்சயம்” என்ற அவர் அனைத்து தேசிய எதிர்ப்பு இயக்கங்களும் மற்றும் கண்கவர் டிவி அறிவிப்பாளர்களும் சிதம்பரத்தை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

அடுத்த செய்தி