ஆப்நகரம்

முதல்வர் ஜெயலலிதாவுடன் பி. ஆர். பாண்டியன் சந்திப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் சந்தித்து பேசினார்

TNN 1 Apr 2016, 12:09 pm
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் சந்தித்து பேசினார்.
Samayam Tamil p r pandian meets jayalalitha
முதல்வர் ஜெயலலிதாவுடன் பி. ஆர். பாண்டியன் சந்திப்பு


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி. ஆர். பாண்டியன் கூறுகையில், "கர்நாடக அரசு மேகதூது ஆணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவினை நாங்கள் கோரி வருகிறோம்.

நேற்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்தோம்.

இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர்களின் ஆதரவை கோரும் மனுவினை நாங்கள் அளித்தோம்.

இது குறித்து நல்ல முடிவை விரைவில் கூறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்" என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி