ஆப்நகரம்

#ப.சிதம்பரம் நேற்று சிறையில்.. இன்று எய்ம்ஸில்: ஒரு மாத கால சிறையின் விளைவா?

சிறையிலிருந்த ப. சிதம்பரம் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ​

Samayam Tamil 5 Oct 2019, 6:44 pm
ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமலாக்கத் துறையால் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்ப்பட்டு விசாரணைக் கைதியாக திகார் ஜெயிலில் இருந்து வந்தார்.
Samayam Tamil pa chidamram is admitted in delhi aiims
#ப.சிதம்பரம் நேற்று சிறையில்.. இன்று எய்ம்ஸில்: ஒரு மாத கால சிறையின் விளைவா?


கடந்த அக்டோபர் 3ஆம் தேதியுடன் காவல் முடிவுக்கு வரவிருந்த நிலையில், மீண்டும் அக்.17 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் உச்சநீதிமன்றத்தில், ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறையிலிருந்த ப. சிதம்பரம் தற்போது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கும் மேலா, திகார் சிறையில் இருந்துவந்த ப.சிதம்பரம் தற்போது உடல்நலக்கோளாறால் இவ்வாறு அனுமதிக்கப்ப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அடுத்த செய்தி