ஆப்நகரம்

அவிநாசியில் தீண்டாமை கொடுமை; சாதி என்பது விதியா? கொந்தளிக்கும் பா.ரஞ்சித்!

தாழ்த்தப்பட்ட சத்துணவாளர் இடமாற்றத்திற்கு பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jul 2018, 6:05 pm
திருப்பூர்: தாழ்த்தப்பட்ட சத்துணவாளர் இடமாற்றத்திற்கு பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Pa Ranjith


திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன் பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண், சத்துணவு சமைக்கும் ஊழியராக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த மேல்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர் சத்துணவு சமைத்தால், தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் வேறு ஒருவரை நியமித்து சத்துணவு சமைத்துள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

பின்னர் மாவட்ட கல்வி அதிகாரி நேரில் சென்று பேச்சுவார்த்தையும் பலனில்லை. இறுதியில் மேல்சாதியினரின் மிரட்டலுக்கு பயந்து, அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், சத்துணவு பணியாளரை இடமாற்றம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த பாப்பம்மாள், என்னை வேலை செய்யவே விடமாட்டேன் என்கிறார்கள். என்ன செய்வது? எல்லாம் என் விதி. எனக்கு இங்கு வேலை வேண்டும். எத்தனை நாளைக்கு தான் பேருந்து ஏறி, ஏறி வேலைக்கு செல்வது என்று கண்ணீருடன் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், சாதி என்பது விதியா? அந்தப் பெண் அதே பள்ளியில் சமைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Pa.Ranjith felt sad about transfer of dalit cook in Govt School.

அடுத்த செய்தி