ஆப்நகரம்

பாதையை மறித்த படையப்பா... பயந்து ஒதுங்கிய வாகன ஓட்டிகள்... மூணாறில் வழிமறித்த காட்டுயானை

செவ்வாய்க்கிழமையான இன்று, மூணாறில் இருந்து மறையூர் செல்லும் பாதையில் இந்த படையப்பா யானை வாகங்களுக்கு வழிவிடாமல் நின்று கொண்டிருந்ததது.

Samayam Tamil 29 Oct 2019, 8:33 pm
யானைகள் அடிக்கடி மனிதர்கள் குடியேறிய பகுதிக்குள் நுழைவதும், மனித உயிர்களுக்கு சேதம் விளைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கும்கி யானைகளின் உதவியோடு, ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
Samayam Tamil padaiyappa an elephant blocks road of hill ways in munnar
பாதையை மறித்த படையப்பா... பயந்து ஒதுங்கிய வாகன ஓட்டிகள்... மூணாறில் வழிமறித்த காட்டுயானை


இந்நிலையில் தற்போது, கேரள மாநிலம் மூணார் அருகே உள்ள மலைப் பாதையில் காட்டு யானை ஒன்று வழியில் குறுக்கிட்டு, பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் சிறிது நேட்டத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதாவது, சமீப காலமாகவே மூணாறில் உள்ள கன்னிமலி பகுதியில் ஒரு ஒற்றை யானை திரிந்து வருகிறது. படையாப்பா என்று அழைக்கப்படுகிற அந்த யானை மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று, மூணாறில் இருந்து மறையூர் செல்லும் பாதையில் இந்த படையப்பா யானை வாகங்களுக்கு வழிவிடாமல் நின்று கொண்டிருந்ததது.

வெகு நேரமாகியும் படையப்பா வழிவிடாததால், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அலுவலர்கள் வந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் படையப்பா அசராமல் நின்று கொண்டிருந்தது. பின்னர், சிறிது நேரம் கழித்து என்ன நினைத்ததோ, தானாகவே அங்கிருந்து நகர்ந்து சென்றது. இந்தக் காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

இதுவரை 13 உயிர்களை இந்த படையப்பா யானை தாக்கி கொன்றுளதால், மக்கள் இந்த படையப்பா விவகாரத்தில் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் விரைந்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி