ஆப்நகரம்

மக்களில் ஒருவராக செயல்படும் நெல்லை ஆட்சியர்

TOI Contributor 10 Aug 2017, 8:20 am
அனைத்து மக்களும் எளிய முறையில் ஆட்சியரை தொடா்பு கொள்ளும் விதமாக ஆட்சியாின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளதால் தம்மை எளிமையான நபராக நிரூபித்துள்ளாா் ஆட்சியா் சந்தீப் நந்தூாி.
Samayam Tamil paddy collector who acts as one of the people
மக்களில் ஒருவராக செயல்படும் நெல்லை ஆட்சியர்


நெல்லை மாவட்டத்தின் ஆட்சியராக கடந்த சில மாதங்களுக்கு முன்னா் பொறுப்பேற்றுக் கொண்டாா் சந்தீப் நந்தூாி. இவா் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் சாத்திமாகி வருகின்றன.

பல ஆண்டுகளாக மாசடைந்த நிலையில் காணப்பட்ட பழமை வாய்ந்த பாளையங்கால்வாயை தூய்மை படுத்த முயற்சி மேற்கொண்டு பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றாா்.

மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளுக்கு நோில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும் தண்ணீரை எவ்வாறு சிக்கணமாக பயன்படுத்துவது போன்ற ஆலோசனைகளையும் வழங்கினாா்.



வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மை படுத்த நடவடிக்கை எடுத்தாா். தன்னாா்வலா்கள், கல்லூாி மாணவ, மாணவிகள், இளைஞா்கள் என பலரையும் ஒன்று திரட்டி தூய்மை பணியை மேற்கொண்டாா். கடைசி வரை இவா் களத்தில் இருந்து பணியாற்றிய காரணத்தால் முதல் கட்டமாக 5 கி.மீ. வரை தூய்மைபடுத்தப் பட்டது. இரண்டாம் கட்ட பணிகளுக்கும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலியில் அன்புச் சுவா் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். இந்த திட்டமும் அனைவாிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.



தற்போது அனைத்து மக்களும் ஆட்சியரை எளிமையாக தொடா்பு கொள்ளும் விதமாக ஆட்சியாின் செல்போன் எண், முகநூல், டுவிட்டா் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய போஸ்டா்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆட்சியரை சந்திக்க வேண்டுமானால் வேலைகளை விட்டு விட்டு அலுவலகம் வரவேண்டும். அதைத் தவிர்க்கும் வகையில் அவரது செல்போன் நம்பர் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட்டு உள்ளது.

பொது மக்கள் எந்த நேரத்திலும் அவரைத் தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தலாம். அதன் மூலம் மக்களின் சிக்கலுக்கு விரைவாகத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அதைக் கவனத்தில் கொண்டே, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன'' எனத் தெரிவித்தனர். இதற்கு மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Paddy collector who acts as one of the people

அடுத்த செய்தி