ஆப்நகரம்

“பாகிஸ்தான் சிறையில் 257 இந்தியர்கள்”, 20 ஆந்திர மீனவர்கள் மீட்பு!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திர மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு அரசு இந்திய அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தது.

Samayam Tamil 6 Jan 2020, 9:41 am
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சட்ட விரோதமாக உள் நுழைந்ததாகக் கூறப்பட்டு 20 ஆந்திர மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
Samayam Tamil 564718-530355-423025-us-boat-afp


ஆந்திராவைச் சேர்ந்த 20 மீனவர்கள் சில மாதங்களுக்கு முன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகப் பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப்படையால் குற்றம் சாட்டப்பட்டு அவர்களால் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திட்டமிட்டு பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்பதை வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அரசிடம் உறுதி செய்ததைத் தொடர்ந்து 20 ஆந்திர மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முகமூடி தாக்குதல்களால் மீண்டும் போர்க்களமான ஜே.என்.யூ... அதிகரிக்கும் பதற்றம்

மீட்கப்பட்டவர்கள் போக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 237 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக அந்நாட்டு மாலிர் மாவட்ட சிறை எஸ்பி அவுரங்கசீப் காண் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மட்டும் ஆகஸ்ட் மாதம் முதல் இப்போதுவரை மட்டும் 34 இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி!!

20 ஆந்திர மீனவர்களைப் பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் அந்நாட்டில் செயல்படும் அரசு சாரா தன்னார்வ மையம் ஒன்றிடம் ஒப்படைத்தனர். சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பு, 20 மீனவர்களையும் இந்தியப் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

அடுத்த செய்தி