பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
பழனி முருகன் கோயிலின் 3வது உற்சவர் சிலை உடைக்கப்பட்டதால் அது நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 11 Jul 2018, 9:58 am
பழனி முருகன் கோயிலின் 3வது உற்சவர் சிலை உடைக்கப்பட்டதால் அது நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டில் ஐம்பொன்னாலான 3வது உற்சவர் சிலை (அபிஷேக மூர்த்தி சிலை) பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை மூலவர் தண்டாயுதபாணி சிலையை மறைக்கும் வகையில் இருந்ததால் பக்தர்கள் இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த சிலை அகற்றப்பட்டு தனியே வைக்கப்பட்டது. இதனிடையே, இச்சிலையை நிறுவியல் ஊழல் நடந்திருப்பதை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி இச்சிலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இதனை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டில் ஐம்பொன்னாலான 3வது உற்சவர் சிலை (அபிஷேக மூர்த்தி சிலை) பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை மூலவர் தண்டாயுதபாணி சிலையை மறைக்கும் வகையில் இருந்ததால் பக்தர்கள் இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த சிலை அகற்றப்பட்டு தனியே வைக்கப்பட்டது. இதனிடையே, இச்சிலையை நிறுவியல் ஊழல் நடந்திருப்பதை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி இச்சிலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இதனை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.