ஆப்நகரம்

உலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு!

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முருகன் பக்தர்கள், இந்த பஞ்சாமிர்தத்தை பயபக்தியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Samayam Tamil 14 Aug 2019, 12:55 pm
உலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil உலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு!
உலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு!


பொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருள்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருள்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில், பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம், கற்கண்டு உள்பட 5 பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பஞ்சாமிர்தம் திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முருகன் பக்தர்கள், இந்த பஞ்சாமிர்தத்தை பயபக்தியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு!

இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு, இந்திய புவிசார் குறியீடு ஆணையத்திடம், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு, விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பண்புகள் நிறைந்த கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு

ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக பழனி பஞ்சாமிர்தம் இணைந்துள்ளது. இதன்மூலம் முதன்முறையாக தமிழக கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பெருமையை பழனி முருகன் கோவிலுக்கு கிடைத்துள்ளது.

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி!!

அடுத்த செய்தி