ஆப்நகரம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயலுக்கு கொண்டு வாருங்கள்: பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியத்தை செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

Samayam Tamil 17 Jun 2018, 3:28 pm
காவிரி மேலாண்மை வாரியத்தை செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.
Samayam Tamil modi palanisamy


டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நிதி ஆயோக்கின் 4வது நிர்வாக குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். தமிழகத்தில் காவிரி நீரை நம்பி தான் பல மாவட்டங்கள் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அதே போல் மகாநதி முதல் வைகை நதி வரையிலான இணைப்பு திட்டத்தை மத்தய அரசு உடனே செயல்படுத்த வேண்டும். மேலும், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை நிறுவ மத்திய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே 15வது நிதிக்குழுவில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மற்ற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், யூனியன் பிரதேச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி