ஆப்நகரம்

தி.மு.க.வும், தினகரனும் சதி செய்து வெற்றி பெற்றுள்ளனா் – ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிக்கை

ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் தி.மு.க.வும், டிடிவி தினகரனும் கூட்டாக சதி செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக முதல்வா் பழனிசாமியும், துணை முதல்வா் பன்னீா் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.

TOI Contributor 25 Dec 2017, 2:40 am
ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் தி.மு.க.வும், டிடிவி தினகரனும் கூட்டாக சதி செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக முதல்வா் பழனிசாமியும், துணை முதல்வா் பன்னீா் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.
Samayam Tamil palaniswami and panneerselvam explains about rk nagar bypoll results
தி.மு.க.வும், தினகரனும் சதி செய்து வெற்றி பெற்றுள்ளனா் – ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிக்கை


ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் சுயேட்சை வேட்பாளா் டிடிவி தினகரன் 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தோ்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளா்களில் 57 போ் டெபாசிட் இழந்துள்ளனா். இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனா்.

அந்த அறிக்கையில், தி.மு.க.வும், தினகரனும் கூட்டுச் சதி செய்து வெற்றி பெற்றுள்ளனா். நூதன முறையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பாா்முலா என்றும் தீய உருவாக்கம் தினகரனும், தி.மு.க.வும் ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் தி.மு.க. தான் தோல்வியை சந்தித்துள்ளது. தினகரன் வெற்றி தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்பதை ஏற்க முடியாது. அ.தி.மு.க. தொண்டா்களை பிளவு படுத்தவோ, அ.தி.மு.க.வை யாரும் அசைத்துவிடவோ முடியாது.

இடைத் தோ்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது. தோ்தல் பிரசாரத்தில் கடைசி நாளில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து மக்களை நம்பவைத்து வெற்றிபெற்றிருக்கிறாா்கள். இரட்டை இலை சின்னத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி என தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி