ஆப்நகரம்

பாலாற்றில் தடுப்பணை கட்டவில்லை; யானைகளுக்கு நீர்த்தேக்கம் நிறுவுவதாக ஆந்திர அமைச்சர் தகவல்

பாலாற்றில் தடுப்பணைகள் எதுவும் கட்டவில்லை என்றும், காட்டு யானைகளுக்காக குடிநீர்த்தேக்கங்களை மட்டும் நிறுவிவருகிறோம் என்றும் ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.

TNN 31 Jul 2016, 7:07 pm
பாலாற்றில் தடுப்பணைகள் எதுவும் கட்டவில்லை என்றும், காட்டு யானைகளுக்காக குடிநீர்த்தேக்கங்களை மட்டும் நிறுவிவருகிறோம் என்றும் ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil palar issue andhra pradesh minister says small check dams are being built in forest to provide water for elephants
பாலாற்றில் தடுப்பணை கட்டவில்லை; யானைகளுக்கு நீர்த்தேக்கம் நிறுவுவதாக ஆந்திர அமைச்சர் தகவல்


தமிழகம், ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள குப்பம் பகுதியில் ஆந்திர அரசு சார்பாக, பாலாற்றின் சில இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசு மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், பாலாற்றில் தடுப்பணை எதுவும் கட்டவில்லை என்றும், காட்டு யானைகளுக்காக நீர்த்தேக்கங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

சித்துர் மாவட்டத்தில் குப்பம் பகுதியை ஒட்டி, பாலாற்றில் எந்த புதிய கட்டுமானப் பணிகளை வேண்டுமானாலும் மேற்கொள்ளும் உரிமை ஆந்திராவுக்கு உள்ளது. ஆனால், தடுப்பணைகள் அல்லது அவற்றின் உயரத்தை அதிகரித்தல் போன்ற செயல்களில் ஆந்திர அரசு ஈடுபடவில்லை. மாறாக, ஆந்திர, தமிழக எல்லை வனப்பகுதியில் குடிநீருக்காக கஷ்டப்படும் காட்டு யானைகளுக்கு உதவும் விதமாகவே, பாலாற்றின் சில இடங்களில் குடிநீர்த்தேக்கங்களை நிறுவிவருகிறோம் என்றும், ஆந்திர அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்த செய்தி