ஆப்நகரம்

தடம்புரண்ட பல்லவன் 3 மணி நேரத்துக்குப் பின் புறப்பட்டது

திருச்சி அருகே உள்ள பொன்மலையில் தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரத்துக்குப் பின் புறப்பட்டது

Samayam Tamil 25 Apr 2018, 11:12 am
திருச்சி: திருச்சி அருகே உள்ள பொன்மலையில் தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரத்துக்குப் பின் புறப்பட்டது
Samayam Tamil maxresdefault


காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி பொன்மலை அருகே வந்த போது ரயில் என்ஜின் தடம் புரண்டது.

ரயிலின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறினால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. எஞ்சினை சரி செய்து தண்டவாளத்தில் அமர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வர வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ் தாமதமானது. பழுது நீக்கி ரயிலை தண்டவாளத்தில் பொருத்தியதால், 3 மணி நேரத்திற்குப் பின் ரயில் புறப்பட்டது.

அடுத்த செய்தி