ஆப்நகரம்

பனைத் தொழில் பழகு-வீடியோ!

பனைத்தொழில் குறித்து வீடியோ தொகுப்பு...

Samayam Tamil 19 Nov 2019, 3:55 pm
பனைத் தொழிலாளர்கள் பனை மரத்திலிருந்து கள் இறக்கும் காட்சி குறித்த வீடியோ பதிவு. கேரள இளைஞர் ஒருவர், மரத்தின் மீது ஏறி அமர்ந்து கள் இறக்குவதை ஒரு வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும், இந்த தொழிலில் உள்ள சிரமங்கள் குறித்து 15 வருடங்களாக இந்த தொழிலில் ஈட்டுப்பட்டுள்ள ஒருவர் அளிக்கும் விளக்கமும் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil palm tree


பொதுவாகப் பனை மரத்திலிருந்து கள் எடுக்கும்போது, சில பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக ஆண்பனையில், பூக்கும் தருணங்களில், குளவி-கோதும்பி போன்ற விஷ வண்டு அவ்வப்போது கடிப்பதையும் பொறுத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 முறை மரம் ஏறி இரங்க வேண்டிய சூழல் இருக்கும்.

மண்ணெண்ணெய் யூஸ் பண்றவங்க இருக்காங்களா?

வழக்கமாக ஒரு பனை மரத்தில் ஆறு மண் பானைகள் கட்டி வைக்கப்படும். சுமார் 4 மணி நேரத்தில் இந்த பானைகளில் ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் கள் இறங்கும். அதன்படி, ஒரு மரத்திலிருந்து சுமார் 6 முதல்8 லிட்டர் கள் நாளொன்றுக்கு இறக்கப்படுகிறது. பனை மரம், ஆண் பெண் என இரு வகைகளாக அறியப்படும். இரண்டு வகைகளிலிருந்துமே ஒரே சுவையில்தான் கள் கிடைக்கும் என்கிறார்கள் கள் இறக்குபவர்கள்.



தமிழ்நாட்டில் ஆண் பனை மரத்திலிருந்து கள் இறக்குவது சற்று வேறுபடுகிறது. பானையை முழுவதுமாகக் கட்டி மரத்தில் கட்டி, பின் மரத்தில் சீவி விடுவார்கள். இப்படி தமிழ்நாட்டில், பதனீர் இறக்குவதுக்குக் கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள், அதிலிருந்து பனைவெல்லம், கருப்பட்டி போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள்.

ஐடி கம்பெனில 40,000 பேருக்கு வேலை போகப் போகுதாம்!

என்னதான் கடினமாக இந்த வகை தொழிலாளர்கள் உழைத்தாலும், உரியக் கூலி கிடைப்பதில்லை என்பதே உண்மை. இதனால், அரசு விலை நிர்ணயம் செய்து தங்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

அடுத்த செய்தி