ஆப்நகரம்

வீட்டில் கழிப்பறை இல்லையா?- ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டில் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

TNN 24 Mar 2017, 7:06 pm
தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டில் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil panchayat denied mgnrega work to villagers who dont have toilets plea in madras hc says
வீட்டில் கழிப்பறை இல்லையா?- ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை இல்லை


அங்குள்ள தீத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது நபர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தீத்தம்பட்டி பஞ்சாயத்துக்கு உள்பட்டு, 600 குடும்பத்தினர் வசிப்பதாகவும், தங்களது கிராமத்தில் ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளார்.

வறட்சி காரணமாக, அனைவரும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு தரும் ரூ.12,000 தொகையை வைத்து, கழிப்பறை கட்ட முடியாது. குறைந்தபட்சம் ரூ.40,000 தேவைப்படுகிறது. ஆனால், கழிப்பறை இல்லாவிட்டால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை தரமாட்டோம் என்று, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனை நீதிமன்றம் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

A petition has been filed in the Madurai bench of the Madras high court stating that a village panchayat in Tuticorin district of Tamil Nadu has denied work under the Mahatma Gandhi National Rural Employment Scheme to people who did not construct toilets under the Swachh Bharat Abhiyan mission.

அடுத்த செய்தி