ஆப்நகரம்

ஜெயேந்திரருக்கு துணை முதல்வர், இளையராஜாஅஞ்சலி!

இன்று மரணமடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

Sanayam Tamil 28 Feb 2018, 10:34 pm
இன்று மரணமடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
Samayam Tamil panneerselvam and ilaiyaraaja pays homage to jayendra saraswathi death
ஜெயேந்திரருக்கு துணை முதல்வர், இளையராஜாஅஞ்சலி!


காஞ்சிபுரம் மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயேந்திரா் தொடா்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சங்கர மடத்திற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே அவருக்கு இருதய துடிப்பு குறைந்து இருந்தது. இதைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

அவரின் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் , ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்லம் , அமைச்சர் செங்கோட்டையன், கே.பி . முனுசாமி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா அஞ்சலி செலுத்தினார்.

அடுத்த செய்தி