ஆப்நகரம்

சசிகலாவுடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா..! அடுத்தடுத்து வரும் அதிர்ச்சிகள்

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தண்டனை அனுபவித்து வந்த இளவரசிக்கும் கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jan 2021, 4:11 pm
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகலாவுடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Samayam Tamil சசிகலா


கொரோனா தொற்று உறுதியான நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு இளவரசி மாற்றப்பட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

ஜெயலலிதா காலமானதால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களது தண்டனை காலம் அடுத்த சில நாட்களில் முடிவடையவுள்ளது.

ஓசூர் கொள்ளையர்கள் கைது: 'காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்' - முதல்வர்

எனவே சசிகலா வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் கொரோனா மற்றும் இணை நோய் பிரச்சினைகளால் சசிகலா தொடர் சிகிச்சையில் உள்ளார். சசிகலா விடுதலைக்கு பின்னர் இளவரசியும் விடுதலை ஆக இருந்த சூழலில் தற்போது இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி