ஆப்நகரம்

நடிகர் தனுஷை உரிமை கோரும் வழக்கு: ஏப்ரல் 11க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்

தனுஷ் தொடர்பான வழக்கை, ஏப்ரல் 11ஆம் ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

TNN 27 Mar 2017, 6:51 pm
மதுரை: தனுஷ் தொடர்பான வழக்கை, ஏப்ரல் 11ஆம் ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil parentage claim madras hc adjourns dhanushs case to april 11
நடிகர் தனுஷை உரிமை கோரும் வழக்கு: ஏப்ரல் 11க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்


கதிரேசன்(65), மீனாட்சி(53) தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் உரிமை கோரினர். சிறுவயதில் தங்களை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், மாதத்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனுஷ் தரப்பு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன் தம்பதி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர். மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக போதிய கால அவகாசம் வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைக் கவனத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The Madurai bench of the Madras high court on Monday adjourned the hearing on a petition filed by Tamil actor Dhanush to April 11.

அடுத்த செய்தி