ஆப்நகரம்

அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்கள்: கொரோனாவால் வந்த மாற்றம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Samayam Tamil 8 Oct 2020, 6:16 am
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலையிலும் கூட பல பள்ளிகள் முழு கட்டணத்தையும் உடனடியாக செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாக கூறுகின்றனர்.
Samayam Tamil govt schools


இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் வருமானம் இழந்துள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

தமிழக பள்ளிகள் திறப்பு: அரசின் முடிவை வெளியிட்ட அமைச்சர்!

1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பமானது. முன்னெப்போதையும்விட அதிகளவில் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். 14 நாள்களில் 10 லட்சம் மாணவர்கள் இணைந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரித்துள்ளது.

“மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2.5 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.80 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்” என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனியாா் பள்ளிகளில் படித்து நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு பெற்றோா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி