ஆப்நகரம்

மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக கொடுத்த பெற்றோர்கள்!

காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள் கிராமமக்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக பள்ளிக்கு அளித்துள்ளனர்.

Samayam Tamil 7 Mar 2019, 8:46 pm
காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள் கிராமமக்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக பள்ளிக்கு அளித்துள்ளனர்.
Samayam Tamil student


வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள காங்கேயநல்லூரில் அரசினர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு இன்று கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பிலும் அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், பென்சில், பேனாக்கள், சாக்குபீஸ், மேஜை, நாற்காலிகள், பீரோ ,விளையாட்டு உபகரணங்கள், எவர் சில்வர் தட்டுகளும் குடங்கள், பிளாஸ்டிக் டிரம்கள் ஆகியவற்றை திருமுருக கிருபானந்த வாரியார் ஆலயம் அருகிலிருந்து மேளதாளங்கள் முழங்க பள்ளி மாணவர்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து சீர்வரிசையாக அளித்தனர்.

இதில் திரளான மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பெற்றோர்களும் ஆர்வமுடன் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக அவர்களின் சொந்த செலவிலேயே மாணவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுத்தது மணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி