ஆப்நகரம்

காதலுக்கு மறுப்பு: மகளுக்கு மொட்டை அடித்து சித்ரவதை செய்த தந்தை!

மதுரையில் காதலுக்கு மறுப்பு தெரிவித்து மகளுக்கு மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Feb 2018, 6:48 pm
மதுரையில் காதலுக்கு மறுப்பு தெரிவித்து மகளுக்கு மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil parents who tortured their daughter for opposing love and cut her hair
காதலுக்கு மறுப்பு: மகளுக்கு மொட்டை அடித்து சித்ரவதை செய்த தந்தை!


மதுரை மாவட்டம் தன்னூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா. தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் வெங்கடேஸ்வரன் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், அபிநயாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அபிநயாவின் காதலுக்கு அவரது பெறோர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், காதலனை மறக்க முடியாத அபிநயா, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் வெங்கடேஸ்வரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிறகு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்போது, போலீசார் அபிநயாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அபிநயாவை அவருடன் அனுப்பி வைத்தனர்.

பின்னர், அபிநயாவுடன் வீட்டிற்கு சென்ற அவரது பெற்றோர், அவருக்கு மொட்டையடுத்து, தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக, இது தொடர்பாக அபிநயாவின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற அபிநயாவை அவரது பெற்றோர் மொட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீஸார் அபிநயாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி